மகாநதி ஷோபனா பாடிய ஆல்பங்களை வெளியிட தடை!!!!!

கர்நாடக இசை கலைஞரான ஷோபனா, கடந்த 1995 ஆம் ஆண்டு சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து “கந்த சஷ்டி கவசம்” மற்றும் ” டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” ஆகிய இரண்டு ஆல்பங்களை பாடி உள்ளார். இந்த இரண்டு ஆல்பங்களும் ‘சிம்பொனி’ மற்றும் ‘பக்தி எப்.எம்’ என்ற பெயரில் ‘யூ டியூப்’ பில் வெளியிடப்பட்டு தற்போது 4  கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதாக கூறி  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபனா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 13 வயதில் மைனராக இருந்தபோது ஷோபனாவிடம் சிம்பொனி நிறுவனம் போட்ட ஒப்பந்தம் சட்ட ரீதியாக செல்லாது என ஷோபனா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், ஷேபானாவின் அனுமதி இன்றி அவரது புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் இருந்து எடுத்து பயன்படுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி ரமேஷ், ஷோபனா பாடிய ஆல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.

Exit mobile version