அரசு கவின் கலைக் கல்லூரிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும்

அரசு கவின் கலைக் கல்லூரிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்பட தமிழக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, வேளாண் துறையில் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு இத்திட்டம் உதவியாக இருக்கும் என்றார். அரசு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரிக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.

Exit mobile version