அம்மா 2 ஆம் ஆண்டு நினைவு தினம் – அரசியல் தலைவர்கள் உருக்கம்

 

ஜெயலலிதாவை இன்றைய தினத்தில் நினைவு கூறுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவர் சீக்கிரமாக நம்மிடருந்து விடைபெற்று விட்டதாகவும், அவரது இழப்பு மிகுந்த வேதனைக்குரியது எனவும் அவர் உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா : திமுக எம்.பி. கனிமொழி

ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்றும், அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா என்றும், திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிந்தனையில் தெளிவு கொண்டவர் ஜெயலலிதா : இல கணேசன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இழப்பு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாதது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். மதுரையில் உள்ள அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், சிந்தனையில் தெளிவு கொண்டவர் ஜெயலலிதா என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Exit mobile version