திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது: ஜெயக்குமார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என தமிழக மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைபோல் வெற்றி பெற்றுவிடலாம் என பலகோடி ரூபாய் செலவு செய்து டிடிவி.தினகரன் படுதோல்வி அடைந்துவிட்டதாக கூறினார். இதன் மூலம் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்பது நிரூபனமாகிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என தமிழக மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், மக்களவை தேர்தலில் திமுக பெற்று இருக்கும் வெற்றி முதலையிடம் இருக்கும் தேங்காய் போன்று யாருக்கும் பயன் அளிக்காது என தெரிவித்தார்.

Exit mobile version