மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கு தேர்தல் வராது – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம் 

மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் வராது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது என்பதை ஆணையம்தான் முடிவு செய்யும் என்று கூறினார். இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.

தான் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில், சிறப்பாக நடைபெற்று வரும் ஆட்சி மீது கமல்ஹாசன் புழுதிவாரித் தூற்றுவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

Exit mobile version