1970-களில் வாகன ஓட்டிகளின் மனதை கவர்ந்த "ஜாவா" விற்பனைக்கு வர உள்ளது

ராயல் என்பீல்டுக்கு போட்டியாக “ஜாவா” இருசக்கர வாகனத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

இந்தியாவில் 1970-களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் மனதை கவர்ந்த வாகனங்களில் முக்கியமானது ஜாவா. சீறிப் பாயும் ஜாவாவுக்கு என ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால் பிற்காலத்தில் ஜாவா இருசக்கர வாகனம் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.இப்போது ஜாவா மீண்டும் விற்பனைக்கு வர உள்ளது.

இதனை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கிறது. 27 பிஎச்பி திறவுடன், ஃபியூயல்  இன்ஜக்ஷன் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.  இந்த புதிய இருசக்கர வாகனம் 293சிசி இன்ஜினுடன் 6 கியர்கள் கொண்டதாகவும் உள்ளது.

 

 

Exit mobile version