கடல் எல்லையை வரையறுக்க கொழும்பு சென்றது ஜமுனா போர்க் கப்பல்

கடல் எல்லையை வரையறுக்கும் பணிக்காக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஜமுனா போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

இந்தியப் போர்க் கப்பலான ஜமுனா, கடல் எல்லையை வரையறை செய்தல் மற்றும் ஒன்றிணைக்கும் திட்டப்பணிகளுக்காக இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு சென்றுள்ளது. அங்கு இந்திய போர் கப்பலுக்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் நாட்களில் கொழும்பிலிருந்து – காலே ( galle ) பகுதி வரையான கடலோர எல்லையை நிர்ணயிக்கும் பணிகளில், அந்நாட்டுடன் இணைந்து ஈடுபடுத்தப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இக்கப்பலில் 230 இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு சென்றுள்ளனர்

 

Exit mobile version