தீவிரவாதில்களால் கடத்தப்பட்ட 19 வயது இளைஞர் படுகொலை – கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுப்பு

ஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஹுஸைஃப் குடாய் (Huzaif kuttay) கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியன் (shopian) மாவட்டத்தை சேர்ந்த ஹுஸைஃப் குடாய் (Huzaif kuttay) உள்பட 3 இளைஞர்கள் நேற்று காலை தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். காவல் துறைக்கு உளவாளியாக செயல்பட்டதால் தீவிரவாதிகள்கடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடத்தப்பட்ட ஹுஸைஃப் குடாய்(Huzaif kuttay) என்ற 19 வயது இளைஞர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது உடல் அடையாளம் காட்டப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, கடத்தப்பட்ட மற்ற இருவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version