பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியின் பெயரை ஸ்டாலின் அறிவித்ததை அதன் கூட்டணி கட்சிகளே ஏற்கவில்லை என்று பாஜக தேசிய பொதுச்செயலர் ராம் மாதவ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முப்படைகளின் திறனை அதிகரிக்கும் வகையில் ரபேல் போர் விமானங்களை வாங்க பாஜக அரசு முடிவு செய்ததாகவும், விரைவில் அந்த விமானங்கள் இந்தியா வர உள்ளதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினர் ஊழலில் திளைத்தவர்கள் என்பதால், மோடியையும் ஊழல்வாதி என குற்றம் சாட்டுவதாக அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறை செல்லும் அளவுக்கு திமுக மத்திய அமைச்சர்களின் செயல்பாடு இருந்ததாக ராம்மாதவ் கூறினார். தற்போது மீண்டும் ஊழல் செய்ய காங்கிரசுடன் திமுக இணைந்துள்ளதாக அவர் விமர்சித்தார்.