சன்னி லியோன் வரைந்த ஓவியமா இது? – என்ன அழகு!

பாலிவுட்டின் பேபிடால் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை சன்னிலியோன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏழை மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களால் ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்று வருகிறார். அந்த வகையில் அவர் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது.

 

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தகவலில், “புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட உள்ளதாகவும், அதற்கு இந்த ஓவியத்தை ஏலம் விட உள்ளதாகவும்” கூறியுள்ளார். மேலும் இந்த ஓவியமானது விட்டு பிரிந்தவர்களின் அன்பின் அடையாளமாக வரைந்துள்ளதாகவும், அதனை ரொம்ப மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அவரின் இந்த செயலை ரசிகர்கள் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே சன்னியின் தந்தையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version