’ஐபிஎல் அடுத்த சீசனிலும் தோனி சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பார்’ – சிஎஸ்கே அணியின் சிஇஓ பேச்சு!

ms dhoni

ஐபிஎல்-ன் அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என, அதன் சிஇஒ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சிஎஸ்கே அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன், அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎல்-லில் இருந்து 13 பேர் ஐபிஎல்-ல் விளையாடுவதாகவும், இந்திய அணியிலும் தமிழக வீரர்களின் பங்கு குறையவில்லை எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், திருவாரூரில் கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version