படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

கோவையில் கட்டிட தொழிலாளி ஒருவர் தனது மகள் எழுதிய கவிதையுடன் வட இந்தியர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். வடவள்ளி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலமுருகன், வட இந்தியர்களால் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலையில்லா நிலை உருவாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் பிள்ளைகள் அடிமையாகி விட கூடாது என்றும், வட இந்தியர்களிடம் இருந்து தமிழகத்தை மீட்டெடுப்போம் என்று மகள் தமிழ்மதி எழுதிய கவிதையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Exit mobile version