திருப்பூரில் சர்வதேச அளவிலான பின்னாலை இயந்திர கண்காட்சி

திருப்பூரில் சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திர கண்காட்சி நடைபெற்று வருகிறது.

திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள ஹைடெக் வளாகத்தில் நடைபெற்று வரும் 15-வது சர்வதேச பின்னலாடை இயந்திர கண்காட்சியை, திருப்பூர் சைமா சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். 4-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.சீனா , அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளின் பின்னலாடை தயாரிப்பு இயந்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியை தொழில்துறையினர், ஏற்றுமதியாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Exit mobile version