அணை பாதுகாப்பு மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்ப்பு

தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளதால், அணை பாதுகாப்பு மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், மாநிலங்களின் கருத்துகளை கேட்காமல் அணை பாதுகாப்பு மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தக் கூடாது என்றார். மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் வகையில் அணை பாதுகாப்பு மசோதா உள்ளதால் அதனை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட அணைகள் கேரளாவில் இருந்தாலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனை பராமரிப்பதில் சிக்கல்கள் வரலாம் என நவநீதகிருஷ்ணன் கூறினார்.

Exit mobile version