ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து வடமாநில இளைஞர் காயமடைந்துள்ளார்

திரிசூலம் பகுதியில் கட்டிட வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளி இனசேர் ஆலாம் என்பவரின் காலில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் இனசேர் ஆலாம்மை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மீனம்பாக்கம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட மலை பகுதியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த போது இனசாம் ஆலாம் காலில் குண்டு பாய்ந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் துப்பாக்கி குண்டுகளை அகற்றினர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version