யாழ்ப்பாணத்தில் இந்தியா உதவியுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா

இலங்கை யாழ்ப்பாணத்தில் இந்தியா உதவியுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடமாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இந்தியாவிலுள்ள தனியார் துறை சார்பில் தொழிற்சாலைகளை உருவாக்கி அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தின் முதல்தொழில்நுட்ப பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவுக்கு வடமாகாண சபை வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Exit mobile version