பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அசத்தல்

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனைகள் 3 பேர் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 57 கிலோ பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சோனியா லாத்தெர், மொராக்கோ வீராங்கனை டோஜானி டோயாவை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லாத்தெர் 5-க்கு 0 என்ற கணக்கில் டோஜானி டோயாவை எளிதில் வீழ்த்தி காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

51 கிலோ பிரிவில் பங்கேற்ற பிங்கி ராணி, 4-க்கு 1 என்ற கணக்கில் அர்மேனியா வீராங்கனை அனுஷ் கிரிகோர்யானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

64 கிலோ பிரிவின் 2-வது சுற்றில் போட்டியிட்ட சிம்ரன்ஜித் கவுர், 4-க்கு1 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமெலி மூரை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Exit mobile version