போர்ச்சுகலில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண்! பொறுப்பேற்று பதவிவிலகிய சுகாதாரத்துறை அமைச்சர்!

portugal news

போர்ச்சுகலில் அவசர கால மகப்பேறு மருத்துவ சேவையை தற்காலிகமாக நிறுத்தியதன் காரணமாக இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி சுற்றுலா பயணி உயிரிழந்த நிலையில், அதற்கு பொறுப்பேற்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் பதவி விலகினார்.

போர்ச்சுகலுக்கு சுற்றுலா சென்ற இந்தியாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அவசர கால மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவ சேவை வழங்கப்படாததால் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

அங்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்த நிலையில், அவரது இறப்புக்கு பொறுப்பேற்று சுகாதார துறை அமைச்சர் மார்டா டெமிடொ பதவி விலகினார்.

Exit mobile version