பாகிஸ்தானின் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் காயம்

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளனர்

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இதில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீர் எல்லை பகுதியில் 12 இடங்களில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி விடிய விடிய தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் படையினர் நடத்திய இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். அதேவேளையில், பாகிஸ்தானின் நிலைகளை இந்திய வீரர்கள் தாக்கி அழித்தனர். இதனால், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

 

Exit mobile version