கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இந்திய பனைப் பொருளாதார மாநாடு 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பனை பொருளாதார மாநாடு நடைபெற்றது. பனையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் மாநாட்டில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில், சுதேசி இயக்கம் சார்பில் இந்திய பனைப் பொருளாதார மாநாடு நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாய்வு நடத்தினர். பனையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டில் பங்கேற்ற அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பனைப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 

 

Exit mobile version