தடகள போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை பி.யு.சித்ரா சாதனை

ஸ்வீடனில் நடந்த தடகளப் போட்டியில், இந்தியாவை சேர்ந்த பி.யு. சித்ரா தங்கம் வென்று அசத்தினார்.

இந்திய தடகள வீரரும், ஆசிய தடகள சாம்பியனுமான பி யு சித்ரா, ஸ்வீடனின் சொல்லென்டுனா நகரில் நடைபெற்ற போல்க்ஸாம் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டார். ஆயிரத்து 500 மீட்டர் தூரத்தை, வெறும் 4 நிமிடம் 12.65 விநாடிகளில் ஓடி, பி.யு. சித்ரா சாதனை படைத்ததுடன், தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில், 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற கென்யாவின் மெர்சி செரோனோவை, தோற்கடித்து பி.யு. சித்ரா வெற்றி பெற்றுள்ளார்.

Exit mobile version