இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு டெல்லியில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது

கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய விமானப்படை நடத்திய பதலடி தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலின் போது, பாராசூட்டில் இருந்து குதித்த இந்திய விமானப்படை வீரரான அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவத்தின் பிடித்துசென்றனர். 72 மணிநேரத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அபிநந்தன், நேற்று தாயகம் வந்தடைந்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பதிலடி தாக்குதலின் போது பாராசூட்டில் இருந்து குதித்ததால் உடம்பில் ஏதும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதும் குறித்து, அபிநந்தனுக்கு முழு அளவில் மருத்துவ பரிசோதனையும், மனநல பரிசோதனையும் செய்யப்பட்டது.

Exit mobile version