செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி ”இந்தியா”

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியுடன் துவக்கம்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, 327 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அபாரமாக ஆடிய இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் 123 ரன்கள் விளாசினார். மயங்க் அகர்வால் 60 ரன்களும், ரஹானே 48 ரன்களும் எடுத்தனர். பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 197 ரன்களுக்கு சுருண்டது. பவுமா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.

இறுதி நாளான இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

முன்னதாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்  34 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், லுங்கி என்கிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பயணித்த தென்னாப்பிரிக்கா, டெஸ்டின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.மதிய உணவு இடைவேளையின் போது, டெம்பா பவுமா மற்றும் மார்கோ ஜான்சன் முறையே 34 மற்றும் 5 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.


மதிய உணவுக்குப் பிறகு முகமது ஷமி முதல் விக்கெட்டை எடுத்தார் மற்றும் ஆர் அஷ்வின் தொடர்ச்சியான பந்துகளில் இறுதி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, செஞ்சுரியனில் இந்தியா தனது முதல் டெஸ்டில் வெற்றி பெற உதவினார். டெம்பா பவுமா 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் 77 ரன்களில் கேப்டன் டீன் எல்கரை விக்கெட்டைக் கைப்பற்றுவதற்கு முன், விறுவிறுப்பான வேகத்தில் ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தனர். பின்னர் முகமது சிராஜ் 21 ரன்களில் குயின்டன் டி காக்கை வெளியேற்றினார்.

ஷமி வேகப்பந்து வீச்சால் தொடக்க அமர்வின் மூன்றாவது விக்கெட்டான வியான் முல்டரை வீழ்த்தினார். இது செஞ்சூரியனில் தனது முதல் வெற்றியின் விளிம்பில் இந்தியாவை அழைத்துச் சென்றது. அவர்கள் இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் கோட்டையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு முறையும் தோற்றனர்.

கடைசியாக 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவில் 2 டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சிறப்பை இந்திய அணி பெற்றது.

இந்த வெற்றி இத்தொடரைக் கைப்பற்ற சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது,என்பதில் ஐயமில்லை.எனினும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி கனியைப் பறிக்க முடியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!

Exit mobile version