பயங்கரவாதிகளின் மிரட்டலை கண்டு இந்தியா ஒருபோதும் அஞ்சாது

இந்தியாவின் எந்தவொரு பாகத்தையும் காக்கும் வல்லமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் பயங்கரவாத மிரட்டல்களைக் கண்டு ஒரு போதும் அஞ்சுவதில்லை என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான அய்மான் அல் ஜவாகிரி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியில், காஷ்மீரில் இந்திய படைகளுக்கும், அரசுக்கும் எதிராக தாக்குதலில் ஈடுபடுமாறு பயங்கரவாதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், பயங்கரவாதிகளின் மிரட்டலைக் கண்டு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்றும், நாட்டின் இறையாண்மையை காக்க அனைத்து வித முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version