வரும் புத்தாண்டிலும் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் – பிரதமர் மோடி

வரும் புத்தாண்டிலும் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மன் கீ பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையை சேர்ந்த மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் தன்னிடம் சிகிச்சை பெற வரும் மக்களுக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை அளித்ததாக பிறர் கூற தான் கேட்டிருப்பதாக நினைவுக்கூர்ந்தார். அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்திருப்பதாக புகழாரம் சூட்டினார். ஏழைகள் பயன்பெறும் வகையிலான மருத்துவ நண்பர்களின் சுயநலமற்ற சேவை உண்மையில் பாராட்டிற்குரியது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Exit mobile version