மே.தீ. அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு – முதல் ஒருநாள் போட்டி நாளை தொடக்கம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், கவுகாத்தியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான அணியில், ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, தோனி, குல்தீப் யாதவ், முகமது ஷமி உள்ளிட்ட 12 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Exit mobile version