நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 959 பேர் பலி

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 918 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை நேற்றைவிட 24 ஆயிரத்து 363 குறைந்துள்ளது.

தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 15 புள்ளி 77 சதவீதமாக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 959 பேர் ஒரேநாளில் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்து 50ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் திருத்திமைக்கப்பட்ட கொரோனா உயிரிழப்பு பட்டியலில் புதிதாக 374 பேர் சேர்க்கப்பட்டதால் தொற்று உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 2 லட்சத்து 62 ஆயிரத்து 628 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்த 18 லட்சத்து 31 ஆயிரத்து 268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Exit mobile version