இந்திய பொருட்கள் மீது இனி அதிக வரி விதிக்கப்படும்

இந்திய இறக்குமதி பொருட்கள் மீது இனி அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நான்கு நாட்கள் கன்சர்வேட்டிங்க் மாநாடு நடைபெற்றது. இதில் கடைசி நாளில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா ஒரு உயர் வரி விதிப்பு நாடு என்று கூறினார்.

முன்னதாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதில்லை என்று சுட்டிக் காட்டிய அவர், ஆனால் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் இருசக்கர வாகங்களுக்கு இந்தியா 100 சதவீகித வரி விதிப்பதாக தெரிவித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது இனி அமெரிக்கா அதிக வரி விதிக்கும் என தெரிவித்தார்.

Exit mobile version