அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜாவேத் பாஜ்வா அழைப்பு  விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் அந்நாட்டு ராணுவ தளபதி ஜாவேத் பாஜ்வா ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவம் சிறந்த தொழில் முறை மற்றும் போரிடம் திறன் கொண்டதாகவும் என கூறினார்.

இதைப்புரிந்து கொண்டு பேச்சுவார்த்தை மூலம் அமைதி மற்றும் வளர்ச்சியை இந்தியா ஏற்படுத்த முயன்றால் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சரை அடுத்து தற்போது அந்நாட்டு ராணுவ தளபதி இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version