சிபிஎஸ்இ பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் அதிகரிப்பு

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியலின மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் 24 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுக் கட்டணம் 50 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கூடுதல் பாடங்களில் தேர்வு எழுதினால் செலுத்த வேண்டிய கட்டணம் 150 ரூபாயில் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகளை டிசம்பர் மாதம் திட்டமிட்டுள்ள சிபிஎஸ்இ, தொழிற்கல்விக்கான தேர்வுகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த உள்ளது.

Exit mobile version