பழத்தில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம்!

கேரளாவில் பழத்தில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புரம் மாவட்டத்தில் உணவு தேடி ஊருக்குள் வந்த கர்ப்பிணி பெண் யானைக்கு, அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்ய முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் யானை கொல்லப்பட வழக்கில் ஒருவரை கைது செய்துள்ளதாக அம்மாநில வனத்துறை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் விவரங்களை வெளியிடாத வனத்துறை, கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version