திருப்பதி கோவிலில் பியூஷ் கோயல் -தம்பிதுரை சுவாமி தரிசனம்

நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் திருப்பதி மலைக்கு சென்றனர். அங்கு, அபிஷேக சேவையில் கலந்துகொண்டு இரண்டு பேரும் ஏழுமலையானை தரிசித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, அதிமுக ஏற்படுத்தியிருக்கும் கூட்டணியின் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று உறுதிபடக் கூறினார். இதன் மூலம், மத்தியில் சாதகமான அரசு ஏற்பட்டு, தமிழகத்துக்கு தேவையான நிதி உதவிகள் தாராளமாக கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version