ஒடிசாவில் ரூ.1,260 கோடியில் கட்டப்பட்ட ஐஐடி – இளைஞர்களுக்கு அர்ப்பணிப்பு

ஒடிசாவில் ஆயிரத்து 260 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள ஐஐடியை புவனேஸ்வர் இளைஞர்களுக்காக அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் குர்தாவில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவில் அமைக்கப்பட்டுள்ள ஐஐடி, இளைஞர்களுடைய கனவுகளின் இடமாக மட்டுமில்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் இடமாகவும் அமையும் என்றார். தற்போது பாஜக ஆட்சிக்காலத்தில், ஒடிசா பெண்கள் முன்னேற்றத்துக்காக 35 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்மூலம் தற்போது 70 சதவீத ஒடிசா இல்லங்களில் இந்த சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்துள்ளதாக மோடி கூறினார்.

 

 

Exit mobile version