10ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை இ.எம்.ஐ.எஸ். போர்ட்டலில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் உடனடியாக பதிவேற்றம் செய்ய அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2019 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பள்ளி மாணவ, மாணவிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை இ.எம்.ஐ.எஸ் போர்டலில் பதிவுசெய்ய பள்ளிகளுக்கு கடந்த 14ம் தேதிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகள், இந்த பதிவேற்றத்தை செய்யவில்லை. இந்நிலையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து ஆப்லைன் சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து, அதில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்ற அரசுத்தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஆப்லைனில் பதிவு செய்த இந்த விபரங்களை வரும் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யவும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version