உதகையில் மே மாதம் 17வது ரோஜா கண்காட்சி துவக்கம்

உதகையில் மே மாதம் நடைபெறவுள்ள 17வது ரோஜா கண்காட்சிக்கான கவாத்து செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உதகை ரோஜா பூங்காவில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடைபெறவுள்ள 17வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு அதனை தயார்படுத்தும் வகையில் கவாத்து பணிகள் துவங்கியுள்ளது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

Exit mobile version