அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி நாளிதழ் அலுவலகம் முன்பு த.மா.கா. ஆர்ப்பாட்டம்

தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சென்னையில் உள்ள தமிழ் நாளிதழின் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்களவை தேர்தலுக்கு பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் இணைய போவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மறுப்பு செய்தி வெளியிட வலியுறுத்தியும் நாளிதழின் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யுவராஜ், தமிழக காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் உண்மையான தொண்டர்கள் தமிழ் மாநில காங்கிரஸில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version