மீரா-சேரன் பிரச்சனைக்கு தீர்வாக இன்று கமல் காட்டும் குறும்படம்…

இன்று பிக்பாஸ் வீட்டின் 34வது நாள்.கடந்து வாரம் கிராமத்து செட் அப்பில் பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டு, வீட்டில் இருக்கும் போட்டியளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.கிராமத்து செட் அப் என்பதால் இரு ஊர் மக்களாக பிரிந்து, போட்டியாளர்கள் டாஸ்க்கை விளையாட வேண்டும்.

இரு ஊர் மக்களும் அங்கு நடக்கும் பிரச்சனையை பற்றி புகார் அளிக்க பஞ்சாயத்து தலைவராக சேரனும், மதுமிதாவும் நியமிக்கப்பட்டனர்.டாஸ்க்கின் ஆரம்பம் முதலே சேரனுக்கும், மீராவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.மீரா சக போட்டியாளர்கள் முன்பு சேரனை பற்றி புகார் அளித்தார். சேரன் தன்னை இடுப்பில் கை வைத்து இழுத்து கீழே தள்ளிவிட்டார்.டாஸ்கிற்காக அவர் செய்தாலும் , அப்படி கீழே தள்ளிவிட்டது சரி என தோன்றவில்லை என கூற, சேரன் அதைக் கேட்டு அழுக, வீட்டில் உள்ளவர்கள் சமாதானம் படுத்த இப்படியே இந்த பிரச்சனை போய் கொண்டிருக்கையில்,நேற்று கிராமத்து டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியவர்களை பிக்பாஸ் தேர்வு செய்ய சொன்னார்.மீரா பெயரினை சிலர் தேர்வு செய்ய, எப்படி நீங்கள் மீரா பெயரை தேர்வு செய்யலாம் என சேரன் சண்டையிட, மீரா அதற்கு நடிப்பதற்கு மொழி அவசியம் இல்ல என கூற, சாக்‌ஷி அதற்கு தன்னை தான் கூறுகிறார் என நினைத்துக்கொண்டு அழுக, அனைவரும் சமாதானம் படுத்தினர்.இந்த வாரம் முழுவதும் சண்டையாகவே முடிந்தது.

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் சேரன்-மீரா இடையே உள்ள பிரச்சனையின் தீர்வாக கமல் குறும்படம் காட்ட இருப்பதாக கூறுகிறார்.இன்றைய பிக்பாஸ் வீட்டில் கண்டிப்பாக ஒரு பஞ்சாயத்து இருக்கிறது.

 

Exit mobile version