தகுதியானவர்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு வர வேண்டும் –  ட்ரம்ப் திட்டவட்டம் 

எல்லை விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், தகுதியானவர்கள் மட்டுமே அமெரிக்காவுக்கு வர வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவிற்கு வருபவர்கள் சட்ட பூர்வமாக, தகுதியின் அடிப்படையில் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த அறிவிப்பு இந்தியா உள்ளிட்ட தொழில்நுட்ப நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிற்கு ஏராளமான கார் நிறுவனங்கள் வந்து இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இவற்றில் பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்கள் மட்டுமே வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 

Exit mobile version