சிலை கடத்தல் விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக மேலும் ஓராண்டிற்கு பணிபுரிய ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் கடந்த 4-ம் தேதி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது.

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீடு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. நீதிபதிகள் அசோக் பூஷன், நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ளவுள்ளனர்.

Exit mobile version