ஐ.சி.சி. செயற்குழு கூட்டத்தில் இந்தியா-பாக். ஆட்டம் குறித்து முக்கிய முடிவு ?

ஐ.சி.சி.யின் செயற்குழு கூட்டம் துபாயில் இன்று துவங்குகிறது. இதில், இந்தியா -பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் உடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடக் கூடாது என்ற குரல் வலுப்பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஐ.சி.சி.யின் செயற்குழு கூட்டம் துபாயில் இன்று துவங்கவுள்ளது. உலக கோப்பை தொடரில் ஜூன் 16ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் செய்வது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version