உரிய நேரத்தில் புத்த மதத்திற்கு மாறுவேன் – மாயாவதி

பெருவாரியான மக்களுடன் தகுந்த நேரத்தில் புத்த மதத்துக்கு மாற உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், அண்ணல் அம்பேத்கர் மரணத்துக்கு முன்னதாக புத்த மதத்துக்கு மாறினார் என்று குறிப்பிட்ட மாயாவதி, நானும் மதம் மாறப் போகிறேன் என்றார். நிச்சயமாக புத்தமதத்தைப் பின்பற்றி தீட்சை பெறுவேன் என்றும் தெரிவித்தார். மாயாவதியின் இந்த பேச்சை கேட்ட அக்கட்சியினர், கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

Exit mobile version