சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: ஹிர்த்திக் ரோஷன்

சென்னையில் உள்ள வணிக வளாகத்துக்கு வந்த, பிரபல பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷனை காண ரசிகர் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு அழைப்பாளராக ஹிர்த்திக் ரோஷன் வருகை தந்திருந்தார். இந்நிலையில், அவரைக் காண்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டதால் வணிக வளாகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஹிர்த்திக் ரோஷன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும், இங்கு இருக்கும் தன்னுடைய ரசிகர்களை கண்டது மகிழ்ச்சியைக் தருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version