மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளதால் வீடுகள் அதிர்வு ஏற்பட்டு விரிசல் !

புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பெரிய இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருவதால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்படுவதாக அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து மழைநீர் வடிகால் வாய்க்காக தோண்டப்படும் பள்ளங்கள் பராமரிக்கப்படாமல் பாதிலேயே நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். விடியா திமுக அரசு வீடுகள் விரிசல் ஏற்படாத வகையில் சிறிய இயந்திரங்கள் கொண்டு பள்ளம் தோண்டுவதுடன் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version