எச்ஐவி தொற்று ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்ற வேலை வழங்கப்படும் – மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்

எச்ஐவி தொற்று ஏற்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, தகுதி ஏற்ற வேலை வழங்கப்படும் என, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிமாற்றம் செய்து, எச்ஐவி தொற்று ஏற்பட்ட பெண்ணுக்கு, குழந்தை பிறக்கும் வரை உயர்தர சிகிச்சைகள், முறையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணியாற்றி வந்த lab டெக்னீசியன்கள் 3 பேர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version