பட்டுக்கோட்டை-திருவாரூர் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் துவக்கம்

பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரையிலான அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தினை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றி தற்போது காரைக்குடி, பட்டுகோட்டைக்கு வாரம் இரு முறை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பட்டுக்கோட்டை முதல் திருவாரூர் வரையிலான ரயில் சோதனை ஓட்டம் துவங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த பாதையில் உள்ள தண்டவாளங்கள், சிக்னல்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் பார்வையிட்டார்.

Exit mobile version