பழனி அருகே மனைவியை, கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

பழனி அருகே குடும்ப தகராறின் காரணமாக மனைவியை, கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த அழகாபுரியில் வசித்து வருபவர் காளீஸ்வரி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்,காளீஸ்வரி அவரது குழங்தைகளுடன் தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், இன்று காலை தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த காளீஸ்வரியிடம் அவரது கணவர் பத்ரகாளி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றி, கணவர் பத்ரகாளி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி காளீஸ்வரியை குத்தியுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து அங்கிருந்து தப்பியோடிய பத்ரகாளி பழனி தாலுகா காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version