இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவால் அங்கிருந்த குளம் ஒன்று உறைந்ததையடுத்து அதன்மீது ஸ்கேட்டிங் செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த பனிப்பொழிவால் அம்மாநில மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலைகளில் அதிக பனிப்பொழிவு இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மாநிலத்தின் பல முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. நீர்நிலைகளும் பனிப்பொழிவால் உறைந்துள்ளன.
ஆயினும், அதிக பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனிடையே சிம்லாவில் உள்ள குளம் ஒன்று பனிப்பொழிவால் உறைந்து காணப்படுகிறது. அந்த இடத்தில் சுற்றுலா பயணிகள், ஸ்கேட்டிங் செய்து மகிழ்ந்து வருகின்றனர். ஸ்கேட்டிங் செய்தும், ஒருவர் மீது ஒருவர் பனியை எறிந்தும் அவர்கள் தங்களது மகிழ்ச்சியை தொடர்ந்தனர்.