அமர்நாத் யாத்திரைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

அமர்நாத் யாத்திரையில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பாதையிலும், கந்தர்பால் மாவட்டம் பல்தால் பாதையிலும் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பனி லிங்கத்தை தரிசிக்க 2 லட்சத்து 85 ஆயிரம் பேர் வருகை தந்திருந்தனர். யாத்திரையில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் யாத்ரீகர்கள், காஷ்மீரில் குவிந்து வருகின்றனர்.

Exit mobile version