காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவானதால் மீனவர்கள் 3 நாட்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரனமாக தென் தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் எனவும் ஒருசில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் சென்னையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version