காஷ்மீரில் கடும் குளிர் : குளிரில் தவிக்கும் மக்களுக்கு உதவ ஆர்வம் காட்டும் மக்கள்

காஷ்மீரில் கடும் குளிர் நிலவி வரும் சூழலில், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் கருணை சுவர் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்தநிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ஸ்ரீநகரில் கருணை சுவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடும் குளிரை சமாளிக்க தேவையான போர்வைகள், உணவு வகைகளை பொதுமக்கள் இந்த கருணை சுவரில் வைத்துவிட்டு செல்லுகின்றனர். அவ்வாறு வைக்கப்படும் பொருட்களை, தேவைப்படும் மக்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனால் இந்த திட்டத்தை பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த தன்னார்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.

Exit mobile version